87 வயதில் முதியவரின் விபரீத ஆசை.! நிறைவேற்றிய மகன்கள்.! இறுதியில் சோகம்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மனிதருக்கும் இறப்பதற்கு முன்பு கடைசி ஆசை என்று ஏதாவது இருக்கும். சிலர் குழந்தைகளுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுப்பர். உணவு சாப்பிடுவர். சிலர் குழந்தைகளை ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவர்.

இதுபோல அமெரிக்காவைச் சேர்ந்த 87 வயது முதியவருக்கு வித்தியாசமான ஆசை எழுந்திருக்கின்றது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வசித்து வரும் 87 வயது முதியவர் தன்னுடைய கடைசி ஆசையாக நான்கு மகன்களும் சேர்ந்து ஒரு பீர் குடிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

தன்னுடைய இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவருடைய மகன்கள் பீர் பாட்டில் வாங்கிவந்து தந்தையுடன் சேர்ந்து குடிப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து இருக்கின்றனர்.


இதனை அந்த முதியவரின் பேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.. பீர் பாட்டிலோடு சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தா உயிருடன் இல்லை. அவர் உயிரிழந்துவிட்டார் என்று இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தங்களுடைய குடும்பங்களில் நிகழ்ந்த அனுபவங்களையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OLD MEN LAST WISH


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->