விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிக்!  - Seithipunal
Seithipunal


கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவான் ஜோகோவிச் வெற்றி பெற்று 6-வது முறையாக விம்பிள்டன் பட்டத்தையும், ஒட்டு மொத்தமாக 20 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் கிரான்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிக், இத்தாலியின் பெரெட்டினி களமிறங்கினார்கள். இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஜோகோவிக் முன்னிலையில் இருந்த போது, மீண்டெழுந்த பெரெட்டினி அசத்தலாக விளையாடி முதல் செட்டை கைப்பற்றினார். 

ஆனால் அடுத்தடுத்த செட்களில் கடுமையான சவால் அளித்த ஜோகோவிக் அடுத்த மூன்று செட்களையும் தொடர்ச்சியாக 6-4 6-4 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தினை தனதாக்கினார். 

இது ஒட்டுமொத்தமாகவே அவர் வெல்லும் ஆறாவது விம்பிள்டன் பட்டம் மற்றும்  தொடர்ச்சியாக மூன்றாவது பட்டமாகும். மேலும் ஒட்டுமொத்தமாக இருபதாவது கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோரின் சாதனைகளை சமன் செய்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Novon Djokovic won Wimbledon tittle 6th time


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->