நமது எதிரி அவர்கள் தான் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


வட கொரியாவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையே பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவின் நடவடிக்கையால் கொந்தளித்த அமெரிக்கா, வடகொரியா மீது பொருளாதார ரீதியாக தடை  விதித்தது. 

இதனால் வடகொரிய நாட்டின் பொருளாதாரம் பெரும் அழிவை சந்தித்து உள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் கிம் அணு ஆயுத தயாரிப்பில் மும்மரமாக இருந்து வருகிறது. அந்நாட்டு மக்கள் உணவிற்கு கஷ்டப்பட, பெரும்பணத்தை அணு ஆயுத தயாரிப்பில் முதலீடு செய்து உலக நாடுகளை அதிரவைத்தார். 

இந்நிலையில், வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேசியுள்ளார். தொழிலாளர் கட்சியின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் அமெரிக்கா தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் தற்போது தேர்தல் நடந்து முடிந்து, வரும் 20 ஆம் தேதி அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், வடகொரிய அதிபரின் பேச்சு உலக அரங்கில் சர்ச்சை ஆகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea President Kim Jong Un Speech about North Korea Enemy America


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->