பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்கதான்டா காரணம்.. போடுடா தூக்கை.. வடகொரியா திகீர்.! - Seithipunal
Seithipunal


உலகளவில் உள்ள நாடுகளில், மர்ம தேசமாக இருப்பது வடகொரியா. அங்கு என்ன நடந்தாலும், அந்நாட்டின் அரசு செய்தி வெளியிட்டால் மட்டுமே, வடகொரியாவின் நிலவரம் வெளி உலகிற்கு தெரியவரும். அதிபர் கிம் ஜாங் உன் சர்வாதிகார ஆட்சியை கடுமையாக நடத்தி வருகிறார். 

உலகமே கொரோனா வைரஸின் தாக்கத்தில் விழிபிதுங்கி இருந்த நிலையில், ஒருவர் கூட கொரோனாவால் வடகொரியாவின் பாதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு வடகொரியா உள்ளாக்கியது. 

மேலும், அண்டை நாடுகளான சீனா, தென் கொரியா நாடுகளிடமும் இருந்து கொரோனா வடகொரியாவின் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய, எல்லை தாண்டி தப்பி வந்தவர்களை சுட்டு வீழ்த்திய சம்பவமும் அரங்கேறியது. இந்நிலையில், வடகொரியாவின் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாக கூறி தொழிலதிபர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதனைப்போன்று, கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்ததாக மற்றொருவரின் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea President Complete 2 Men Death Penalty


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->