உலகமே கொரோனாவை பார்த்து பயந்துட்டு இருக்கப்ப... அவுங்க மட்டும்... வடகொரியாவின் அடுத்த ஆயுதம்.!
North Korea Introduce Submarine Missile 17 Jan 2021
இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய ஏவுகணையை வடகொரியா அறிமுகம் செய்துள்ளது.
வட கொரியாவின் தலைநகரான பியோங்யாங் நகரில், அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்கம் வல்லமை கொண்ட ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டது.
புக்குக்சோங் (Pukguksong) என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணையானது, பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், இந்த ஏவுகணை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த 7 ஏவுகணையில் ஒன்று என்று தெரிவித்த வடகொரிய அரசு, அவற்றை தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து வருவதாக கூறியுள்ளது.
உலகமே கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் காலத்திலும், அணு ஆயுத உற்பத்தியை பெருக்க பல்வேறு நிதி ஆதாரங்களை அணு ஆயுதங்கள் மீது குவித்தவர் அதிபர் கிம் ஜாங் உன் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
North Korea Introduce Submarine Missile 17 Jan 2021