பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்.. 60 பேர் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


நைஜீரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவு பெற்ற போகோஹராம் பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை அங்குள்ள கிராம பகுதிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இதனால் அப்பாவி பொதுமக்களும், ராணுவ வீரர்களும் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த நிலையில், நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் என மொத்தமாக 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

நைஜீரிய நாட்டில் உள்ள போர்னோ மாகாணத்தில் இருக்கும் போகோஹராம் தீவிரவாதிகள், இருவேறு இடங்களில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 20 வீரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், இது போன்ற மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமல்லாது கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அங்குள்ள மோகனா மற்றும் நஸாயீ போன்ற இடங்களில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 81 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு பழிவாங்கும் பொருட்டு இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria terrorist attack 60 person died including 20 army men


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->