ஒரேயொரு இரவு.. அரங்கேறிய கொலைவெறி தாக்குதல்.. 80 பேர் துடிதுடிக்க பலி.! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரிய நாட்டில் போகோஹறாம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களுக்கும் அந்நாட்டின் காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. 

மேலும், அங்குள்ள கிராம பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை மொத்தமாக கொலை செய்து வருகின்றனர். மேலும், அங்குள்ள அண்டை நாடுகளான நைஜர், சாத் போன்ற நாடுகளிலும் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர். 

அங்குள்ள தில்லாபுரி மாகாணத்தின் சோம்பங்கவ் கிராமத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீடுகளில் இருந்த மக்களை வீதிக்கு இழுத்து வந்து பெண்கள், சிறுவர்கள் என பாரபட்சமின்றி கொலை செய்துள்ளனர். 

இந்த தாக்குதலில் மொத்தமாக 50 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் பதற்றம் அடங்குவதற்குள், அங்குள்ள ஷாரூம்பேரே கிராமத்தில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து ஒரேநாள் இரவில் நடைபெற்ற வெவ்வேறு கிராம தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கை துவங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத இயக்கங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்நாட்டின் அரசுக்கும், உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria Boko Haram Terrorist Attack India Condemn


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->