பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காத்திருந்த சோகம்.! கதறி அழும் குடும்பம்.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தில் ஒயிட் தீவு என்ற இடம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கே கடந்த வாரம் திடீரென எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கி கொண்டனர்.

மீட்புப் பணிகள் தீவிரம் ஆக்கப்பட்ட நிலையிலும், எரிமலை வெடிப்பில் 9 பேர் பலியாகிவிட்டனர். 8 பேர் மாயமான நிலையில் 30 பேர் அதீத காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து சமீபத்தில் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்தார்.

இதன் காரணமாக பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த கிரிஸ்டல் ஈவ் புரோவிட் என்ற 21 வயது நிறைந்த இளம்பெண் கால்நடை மருத்துவம் படித்து வந்துள்ளார். தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரிடன் சேர்ந்து அங்கு சுற்றுலா சென்று இருக்கின்றார்.

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறார். அவருடைய தந்தைக்கும், சகோதரிக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தாய்க்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட ஏற்படவில்லை. பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் இப்படி உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new Zealand volcano explosion birthday is final day


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->