நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் படுகாயம்!
new zealand gun shoot
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. நேற்று வெள்ளிக் கிழமை என்பதால், அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
வங்கதேச கிரிக்கெட் அணியானது நியூசிலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் வங்கதேச வீரர்களில் சிலர் அருகில் இருந்த அல் அமூர் என்ற மசூதிக்கு தொலுகை செய்வதற்காக சென்றுள்ளனர். அந்த நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் துப்பாக்கியால் சராமாரியாக சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.
இதைக்கண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை கண்டு பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம். மேலும், அங்கு நடந்த சம்பவம் ஒரு இனவெறி தாக்குதல் என்று நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 ஆண்டுகளாக நியூசிலாந்தில் வாழ்ந்து வரும் அகமது ஜஹாங்கீர், அல் நூர் மசூதிக்கு அருகே ஒரு உணவகத்தை நடத்தி வந்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியாவில் வசிக்கும் அவரது சகோதரருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.