கள்ளத் தொடர்பை முறித்து கொண்டதால் ஆத்திரம்.! ஏழு வயது சிறுவன் கொலை.!
near maharastra guard arrested for seven years old boy kill
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் ஏழு வயது சிறுவன். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர்.
ஆனால், சிறுவன் எங்கும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுவனின் வீட்டிற்கு அருகே உள்ள நீச்சல் குளத்தில் அவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுவனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த சிறுவனை பள்ளியிலிருந்து வீட்டில் காவலாளியாக வேலைபார்த்த நிதின் காம்ளே என்பவர் அழைத்து வருவதும், சிறுவனை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் காம்ளே மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதன் விபரம் பின்வருமாறு : - "சிறுவனின் தாய்க்கும், காவலாளி நிதின் காம்ளேவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர்.
இதனால் கோபமடைந்த நிதின் காம்ளே அந்தப் பெண்ணை பழிவாங்குவதற்காக அவருடைய ஏழு வயது மகனை கொலை செய்த விவகாரம் அம்பலத்திற்கு வந்தது. இதையறிந்த போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
near maharastra guard arrested for seven years old boy kill