நேபாளத்தில் 22 பயணிகளுடன் மாயமான விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் 22 பயணிகளுடன் காணாமல் போன விமானம் விழுந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் பொக்காராவில் இருந்து காலை 9.55 மணிக்கு ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென மாயமாகி உள்ளது.

இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில், மஸ்டாங் அருகே கோவாங் என்ற கிராம பகுதியில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தின் முழுமையான நிலை குறித்து இன்னும் தகவல் ஏதும் தெரியவில்லை என்று திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Missing plane found in Nepal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->