போதைபொருள் கடத்தல் கும்பலுக்குள் அடிபிடி சண்டை.. 19 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டில் உலகளவில் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. அங்கு கடத்தலில் ஈடுபடும் கும்பல்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதிக்கொண்டு வருவதும் தொடர்ந்து கொண்டு வருகிறது. 

இந்த காரணத்தால் அப்பகுதியில் இருப்பவர்கள் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அந்நாட்டில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிஹூவாஹூவா மாகாணத்தில் இரண்டு போதை கும்பல்களுக்கு இடையே பயங்கரமான மோதலானது வெடித்துள்ளது. 

இந்த மோதலின் காரணமாக இரண்டு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டு கொண்ட நிலையில், அப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர். 

காவல் துறையினர் வந்ததும் சம்பவ கும்பல், சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், இந்த மோதலில் 19 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இரண்டு பேர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை அடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mexico Drugs gang fight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->