கொரோனாவில் இருந்து மீண்டு வரும் சீனா.! மீண்டும் ஆரம்பித்த வேலை.!
Metro train starts in china
சுமார் 65 நாட்களுக்கு பிறகு சீனாவில் இன்று மெட்ரோ ரயில் சேவை ஆரம்பமாகின்றது.
கொரோனா பாதிப்பில் இருந்து சீனா வேகமாக மீண்டு வந்துள்ளது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.
3795 பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்து வந்துள்ளது. அதில் 74 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் குணமடைந்து இருக்கின்றனர்.
தற்போது சீனாவில் கரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தோன்றிய வுகாம் நகரில் இன்று மெட்ரோ ரயில் சேவை ஆரம்பமாகி இருக்கின்றது.
English Summary
Metro train starts in china