செல்ல பிராணிகளுக்கு கொரோனாவால் ஏற்பட்ட சோதனை.! வைரலாகும் புகைப்படம்.!
mask for dogs in china
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் பலரும் பலியாகி வரும் நிலையில், சிலர் தங்களுடைய செல்லப்பிராணிகளுக்கும் பாதுகாப்பு வேண்டு முகமூடிகளை அணிவித்து இருக்கின்றனர்.
சீனாவில் மட்டுமே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்து இருக்கின்றனர். மேலும், பலருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதனைத் தொடர்ந்து சீனாவில் பலரும் தற்காப்பு நடவடிக்கையாக வெளியில் செல்லும் பொழுது முகமூடிகளை அணிந்து உலா வருகின்றனர்.
அதுபோலவே, தாங்கள் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கும் முகமூடிகளை போட்டு அழைத்து செல்கின்றனர். கொரோனா வைரஸால் செல்லப்பிராணிகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக கூறி இருக்கின்றனர்.
இருப்பினும், சிலர் அதீத பாசத்தால் தங்களுடைய செல்லப்பிராணிகளுக்கும் முகமூடிகளை அணிவித்து அழைத்து செல்வது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றது.