ஊரடங்கால் வேலையை இழந்த விமானி.. தனக்கான வேலையை துவங்கி நெகிழ்ச்சி பதிவு.!
Malaysia Flight Pilot Start Own Business due to Fired Job Corona Lockdown
கொரோனா அச்சுறுத்தலால் வேலையில் இருந்த நீக்கப்பட்ட விமானி ஒருவர், நூடுல்ஸ் கடை தொடங்கி பிரபலமாகியுள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸானது, மலேசிய நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பலரும் தங்களின் வேலைகளை இழந்து மாற்று வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மலிண்டோ ஏர் விமான நிறுவனம் தனது 2000 ஊழியர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.
இந்நிலையில், அந்த விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த நான்கு குழந்தைகளின் தந்தையான விமானி சாவி, வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் குடும்பம் வறுமை நிலைக்கு சென்றுள்ளது. தனது குடும்பத்தை வறுமை நிலையில் இருந்து மீட்க, சற்றும் மனம் தளராமல் தலைநகர் கோலாலம்பூரில் சிறிய அளவிலான நூடுல்ஸ் கடையை தொடங்கியுள்ளார்.
மேலும், விமான கேப்டன் சீருடையான வெள்ளை நிற சீருடையில் வந்து, தனது வாடிக்கையாளருக்கு நூடுல்ஸ் செய்து பரிமாறி வருகிறார். இது குறித்த வீடியோக்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், விமானியின் மாற்றுப்பணி முயற்சிகள் பாராட்டுகளை பெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Malaysia Flight Pilot Start Own Business due to Fired Job Corona Lockdown