லண்டன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் விம்பிள்டன் டென்னிஸ், ஆஷ்லி பார்டி வெற்றி - Seithipunal
Seithipunal


லண்டனில் நடந்துவரும்   மகளிர்களுக்கான  கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆஷ்லி பார்டி சாம்பியன். போராடி தோல்வியுற்றார் பில்ஸ்கோவா..!

லண்டன் நகரில்  விம்பிள்டன் டென்னிஸ்  போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று நடந்தது.  இந்த ஆட்டத்தில்  ஆஸ்திரேலிய  வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.  நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் விளையாடிய ஆஷ்லி பார்டி  தன்னை எதிர்த்து விளையாடிய செக் குடியரசு வீராங்கனை  கரோலினா பில்ஸ்கோவா வை  தோற்கடித்து இந்த வெற்றி கோப்பையை பெற்றார். 

முன்னதாக லண்டர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 -4, 6 -7, 6-3  என்ற நேர் செட்டுக்களில் போராடி  கரோலினா வை வீழ்த்தினார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய பார்டி 5-2 என்ற கேம் கணக்கில் முன்னிலை வகித்தார். அதன்பின், பில்ஸ்கோவா எவ்வளவு போராடியும் முன்னேற முடியவில்லை.  6 -4 என்ற கணக்கில் பார்டி கைப்பற்றினார். 

வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி  செட்டில் இருவரும்  கடுமையாக விளையாடினர். ஆனாலும் பார்டியின் நுணுக்கமான ஷாட்களை சமாளிக்க முடியாமல் 6-3 என்ற கணக்கில் பில்ஸ்கோவா தோல்வியடைந்தார்.  2019 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஒபன் பட்டத்தை வென்ற ஆஷ்லி  பார்டிக்கு இது  இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.  இப்போது விம்பிள்டன் பட்டத்தையும் கைப்பற்றி அனைவரையும் ஈர்த்துள்ளார்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Londan Grand Slam Women's Wimbledon tennis Ashley party wins


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->