லிபியா: அகதிகள் சென்ற படகு விபத்து.. 43 பேர் நீரில் தத்தளித்து பலியான சோகம்.!
Libya Country Shelters Boat Accident 43 Persons Died
லிபியா நாட்டில் உள்ள திரிபோலி நகரின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரையில் கடற்கரை நகரமான ஷவையா உள்ளது. இந்த நகரில் இருந்து படகு மூலமாக புறப்பட்ட அகதிகளின் படகு, திடீரென கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், படகில் இருந்த அகதிகள் கடலில் விழுந்து உயிருக்காக தத்தளித்துள்ளனர். சிலர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீச்சல் நன்கு தெரிந்தவர்கள் கடலில் நீந்தி உயிர் பிழைத்தனர். இந்த கோர விபத்தில் 43 அகதிகள் பலியான நிலையில், எஞ்சிய 10 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த பகுதியில், அகதிகள் படகு விபத்திற்குள்ளாவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இந்த வருடத்தின் துவக்கத்தில் நடைபெற்ற விபத்துகளில், முதல் பெரிய விபத்து என்றும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
அகதிகளின் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கொள்கை பிடிப்பு காரணமாக, இப்பகுதியில் மீட்பு கப்பல்களும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Libya Country Shelters Boat Accident 43 Persons Died