#BIGBREAKING: துறைமுகத்தில் அதிபயங்கர சப்தத்துடன் குண்டு வெடிப்பு.. தூள் தூளாக சிதறிய கட்டிடங்கள்.. பகீர் வீடியோ.!!
Lebanon Beirut port Bomb Explodes
லெபனான் நாட்டில் அதிபயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்கு ஆசிய பகுதியில் சிரியாவிற்கு அருகே லெபனான் நாடு இருக்கிறது. இந்நாட்டின் தலைநகராக பெய்ரூட் நகரம் இருந்து வருகிறது. இந்த நகரில் துறைமுகம் அமைந்துள்ளது. மேலும், இந்த பெய்ரூட் நகரம் சுற்றுலாவிற்கு பிரபலமான நகராகும்.
இந்த நிலையில், தற்போது பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான முழு விபரங்கள் கிடைக்கப்படாத நிலையில், வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் கிட்டங்கியில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அங்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?. எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது தொடர்பான விபரம் இல்லை.
சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் சிறிய அளவிலான தீ விபத்து போல காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், சற்றும் எதிர்பாராத நேரத்தில் அதிபயங்கர சப்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Lebanon Beirut port Bomb Explodes