சொல்ல சொல்ல கேட்காமல் கொரோனா நோயாளி செய்த காரியம்.! துடிதுடித்து பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


பொதுவாகவே வட கொரியாவில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் பிற நாடுகளை அதிர்ச்சியடைய வைக்கும் விஷயமாகத்தான் இருக்கும். ஏனெனில், அந்த நாட்டின் நடைமுறைகளும், சட்டதிட்டங்களும் திகிலூட்டும் வகையில் அமைந்திருக்கும். 

வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது மிகப்பெரிய விஷயமாகவும், பூதாகாரமாக தெரிந்தாலும் அந்த நாட்டு மக்கள் இந்த சட்டதிட்டங்களுக்கு பழகிப்போய் தான் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வட கொரியாவை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தன்னுடைய தொழில் சம்பந்தமாக சீனாவிற்குச் சென்று திரும்பியிருக்கிறார். இதனால், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்த வட கொரிய அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்து இருக்கின்றனர்.

இந்நிலையில், அந்த வர்த்தகர் பொது குளியல் அறைக்குச் சென்று எதேர்ச்சையாக குளித்து இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த வர்த்தகரை கைது செய்து, எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் சிறிது நேரத்தில் சுட்டு கொலை செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் பிற நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

koria killed corono attacking person


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->