பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டேன்..! மன்னர் குடும்பத்தில் நடந்த மன்மத லீலைகள்..!  - Seithipunal
Seithipunal


கோடிஸ்வரனான  பெடோபில் ஜெஃப்ரி எப்ஸ்டீனால் கடத்தப்பட்டிருப்பதாக வர்ஜீனியா கியுஃப்ரே கூறியிருக்கிறார். இவர் இளவரசர் ஆண்ட்ரூவுடன் 17 வயதாக இருந்தபோது 3 முறை உடலுறவு கொள்ள கட்டாய படுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும், அவருக்கு எதிராக நம்பகமான மரண அச்சுறுத்தல் இருப்பதாக எஃப்.பி.ஐ  கூறியதாக வர்ஜீனியா கியுஃப்ரே கூறுகிறார்.

இளவரசர் ஆண்ட்ரூ தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறும் கியுஃப்ரே, நேற்று இரவு ட்விட்டரில் இது தொடர்பான கருத்துக்களை  வெளியிட்டிருந்தார். அதில் பதிவில் "எனக்கு கிடைத்த பெரும் ஆதரவுக்கு பதிலளிக்கும் விதமாக, எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்று போராடும் என் அருகில் நிற்கும் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும், எனக்கு எதிராக நம்பகமான மரண அச்சுறுத்தல் வந்து கொண்டு இருக்கிறது.

மேலும், கியுஃப்ரே அச்சுறுத்தல் குறித்த கூடுதல் விவரங்கள் ஏதும் வழங்கவில்லை, ஆனால் மக்கள் என்னை அமைதிப்படுத்த விரும்புகிறார்கள் என்று திடுக்கிடும் செய்தியை வெளியிட்டனர். சமூக ஊடகங்களில் "நான் எந்த வகையிலும், எந்த  வடிவத்திலும்  தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதை நான் பகிரங்கப்படுத்துகிறேன் (sic). 

மேலும், இதை எனது சிகிச்சையாளருக்கும் ஜி.பி.க்கும் தெரியப்படுத்தியுள்ளேன்- எனக்கு ஏதாவது நேர்ந்தால் என் குடும்பத்துக்காக இதை அப்படியே விட்டு விடாதீர்கள் " என்று தெரிவித்திருக்கிறார் . பெடோஃபைல் ஜெஃப்ரி எப்ஸ்டீனால் தான் கடத்தப்பட்டதாகக் கூறும் மூன்று வயதான குழந்தையின் தாய், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோருவதற்கான ஒரு தளமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

king andrews sexul offender many times raped


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->