மகனின் மீது அலாதி பாசம்.. தம்பதி சண்டையில் அரங்கேறிய கொடூர கொலை.. அனாதையான பச்சிளம் குழந்தை.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மோனிப்பள்ளி பகுதியை சார்ந்தவர் மெரின் ஜாய் (வயது 26). இவர் அமெரிக்காவில் உள்ள தெற்கு புளோரிடா மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கமாக பணிக்கு சென்று, பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகையில் மர்ம நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் பிலிப் மேத்யூ (வயது 34) என்ற நபரை கைது செய்தனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இறந்த பெண்மணியின் கணவர் என்று கூறி காவல்துறையை அதிரவைத்துள்ளார். இதனையடுத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.

கொலைக்கான சம்பவம் குறித்து காவல் அதிகாரி பிராட் பிகோவோன் தெரிவிக்கையில், மெரினின் மருத்துவமனையில் இருந்து வருகையில், அவரை பலமுறை கத்தியால் பில்பி மேத்யூ குத்தியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். 

இந்த தம்பதி கடந்த 2016 ஆம் வருடத்தில் திருமணம் செய்த நிலையில், 2 வயதுடைய குழந்தை இருக்கிறது. இவர்கள் கடந்த 2019 ஆம் வருடத்தில் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், குழந்தை தாயுடன் இருந்துள்ளது. குழந்தையை பார்க்க விடாதது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

பிலிப் இருவரின் மீதும் அதிக பாசம் கொண்டவராக இருந்தாலும், குழந்தை மீதான ஆவல் அளப்பரிய அளவில் மாறி மனைவியை கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala - America women murder by husband in South Florida


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->