பஞ்சாபை சேர்ந்த கபடி பயிற்சியாளர் பிலிப்பைன்ஸில் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் மோகாவை சேர்ந்த கபடி பயிற்சியாளர் குர்ப்ரீத் சிங் கிண்ட்ரு(43) கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் சென்றார். பின்பு இவர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வியாபாரம் செய்வது மட்டுமின்றி, மணிலாவில் இளைஞர்களுக்கு கபடி பயிற்சியும் அளித்து வந்தார்.

இந்நிலையில் இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, அவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் குர்ப்ரீத் சிங் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் குர்ப்ரீத் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் குறித்து மணிலா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kabaddi coach from Punjab shot dead in Philippines


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->