கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போட்ட ட்வீட்.! ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாட்டத்தில்.! - Seithipunal
Seithipunal


அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தீபத் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையில் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாட மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பல தலைவர்களும் தீபாவளி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமரின் அந்த தீபாவளி வாழ்த்து செய்தியில், "உண்மை, ஒளி, நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது. தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்" என்று அந்த தீபாவளி வாழ்த்து செய்தியில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justin Trudeau wish diwali


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->