அடுத்தடுத்து தாக்கும் புயல், நிலைக்குலைந்து அச்சத்தில் இருக்கும் மக்கள்.!
japan attack by cyclone
ஜப்பான் நாட்டை வாட்டி வரும் ஹகிபிஸ் புயலால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள், மேலும் இரண்டு புயல்கள் நகர்ந்துவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட ஹகிபிஸ் புயல் காரணமாக 78 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நியோகுரி எனும் புதிய புயல் டோக்கியோ பகுதியை நாளை கடக்கவுள்ளதாகவும், புலாய் எனும் மற்றொரு புயல், வரும் 26ஆம் தேதி ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையை கடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.