இத்தாலி, ஸ்பெயினில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து வருகின்றனர். சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகரில் துவங்கிய வைரஸ், தனது கோரமுகத்தை வைத்து உலக நாடுகளை பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போதைய சில மருந்துகளை வைத்து இயன்றளவு மக்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த வைரஸின் தாக்கத்திற்கு உலக முழுவதும் 1,431,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,080 பேர் உயிரிழந்துள்ளனர். 302,149 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் நேற்று 141,942 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 704 பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 14,045 ஆக உயர்ந்தது. இந்த நாட்டில் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருவது உலக நாடுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தாலி நாட்டில் 135,586    பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று 604 பேர் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கை 17,127 ஆக உயர்ந்தது. மேலும், உலகளவில் முதல் அதிகளவு பலி எண்ணிக்கையை கொண்ட நாடாக இத்தாலி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy and Spain corona virus peoples death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->