சுரங்கம் தோண்டி தப்பித்த கைதிகள்.. அதிஉயர் பாதுகாப்பு சிறையில் அதிகாரிகள் குறட்டை.!
Israel Prison Escape Issue Officers Sleep well is Major Fact of Prisoners Escape
இஸ்ரேல் நாட்டில் உள்ள கில்போவா இடத்தில், அதிஉயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையினை இஸ்ரேல் அரசு அமைத்துள்ளது. இந்த சிறையில், பாலஸ்தீன ஆதரவு கைதிகள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், இந்த சிறையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக சுரங்கம் அமைத்து 6 பாலஸ்தீன கைதிகள் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், கைதிகள் சுரங்கப்பாதையின் வழியாக சிறைக்கு வெளியே சென்றதும், கண்காணிப்பு பணியில் இருந்த அதிகாரிகள் இரவு வேளைகளில் உறங்கியதும் கைதிகள் தப்பிக்க காரணம் என தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Israel Prison Escape Issue Officers Sleep well is Major Fact of Prisoners Escape