ஐ.எஸ். பயங்கரவாத தலைவனை போட்டுத்தள்ளிய அமெரிக்க படைகள்..! வெளியான தகவல்.!!
is terrorist killed by american army
சிரிய நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கட்டுக்குள் வைப்பதற்கு சிரிய இராணுவத்தின் சார்பாக அவ்வப்போது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தருணத்தில்., சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் ஆதிக்கமும் தொடர்ந்து அதிகரிக்க துவங்கியது.
இவர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் நிலையில்., இந்த தாக்குதலானது அரசிற்கு பெரும் சிக்கலை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது. இந்த தாக்குதல்களுக்கு மூளையாக சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 48) செயல்பட்டு வருகிறான்.
இவனை கட்டுக்குள் வைக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையானது - சிரிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றி வரும் நிலையில்., பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அங்குள்ள வடமேற்கு இத்லி பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அமெரிக்க இராணுவ படைகள்., பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அல் பாக்தாதியை சுற்றிவளைத்து சுட்டு தள்ளினர். இந்த தகவலை தற்போது சிரியா உறுதிப்படுத்தியுள்ள நிலையில்., ஈரானிற்கும் தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
is terrorist killed by american army