அமெரிக்க படை தளத்தை டிரோன் மூலமாக தாக்கிய பயங்கரவாதிகள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கப் படைகளை குறிவைத்து டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஈராக்கில் உள்ள வடக்கு பகுதியில் இருக்கும் குர்திஸ்தான் ஆட்சியின் கீழ் இருக்கும் எர்பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியை, தங்களது தளமாக அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருகிறது. 

இந்த விமானப்படை தலத்தில் உள்ள அமெரிக்கா தளத்தினை குறிவைத்து டிரோன் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகளை குறிவைத்து வழக்கமாக ராக்கெட் தாக்குதல் போன்றவை நடைபெறுவது வழக்கம். 

தற்போது டிரோன்கள் மூலமாக திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் துருக்கி நாட்டினை சார்ந்த இராணுவ வீரர் மட்டும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு விரைவில் அமெரிக்கா சார்பாக பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iraq Military base US Control Airport Base Attack by Tron 15 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->