டேட்டிங் வர மறுத்த பெண்ணை, கொலை செய்து ஆசையை தீர்த்து கொண்ட விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மிகவும் சாதாரணமாக, துப்பாக்கியால் சுடுவது, பிற நாட்டினரை இனவெறியில் சுடுவது மற்றும் கொலை செய்வது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுபோல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவரை உல்லாசமாக இருக்க அழைத்து அந்த பெண் மறுத்த காரணத்தினால் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ரூத் ஜோர்ஜ் என்ற 19 வயது பெண் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் இளங்கலை படித்து வருகின்றார். இந்நிலையில், அந்தப் பெண் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பெண்ணின் மொபைல் போனை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர்.

அப்போது விரைந்து சென்று காவல்துறையினர் கழுத்து நெரித்து அந்த பெண் சொல்லப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பொழுது, 26 வயது அமெரிக்க வாலிபர் அந்த பெண்ணை கொலை செய்தது தெரிய வந்தது.

அவரை கைது செய்து விசாரித்தபோது, மிகவும் அழகாக இருந்ததால் அந்த பெண்ணை ஊர் சுற்ற அழைத்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால்தான் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, என்னுடைய ஆசையை தீர்த்துக் கொண்டேன்." என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIAN GIRL RAP AND KILLED BY AMERICAN BOY


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->