இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல்.. 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!!
Indian army killed 5 Pakistan army members try to illegal entry in border
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் வன்முறையை அரங்கேற்ற பாகிஸ்தான் நாடு திட்டமிட்டுள்ளதாகவும்., இந்த வன்முறை திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளை காஷ்மீர் பகுதிக்குள் அனுப்ப திட்டம் வகுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்., இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக எல்லையில் போர்நிறுத்த விதியை மீறி பாகிஸ்தான் இராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.
இந்த தருணத்தில்., ஜம்மு காஷ்மீர் அடுத்துள்ள குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியை அடுத்துள்ள பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் மேற்கொண்ட அத்துமீறிய தாக்குதலின் போது இரண்டு இந்திய வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இதுமட்டுமல்லாது ஒரு குடிமக்களும் பலியாகினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்., இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தினர் சார்பாக பாகிஸ்தான் பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பதிலடி தாக்குதலின் போது முகாமில் இருந்த பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ஐவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Indian army killed 5 Pakistan army members try to illegal entry in border