#Breaking: இந்திய - சீன எல்லை பதற்றம்.. இராமநாதபுரத்தை சார்ந்த வீரர் பழனி வீரமரணம்..!!
India China border violent Ramanathapuram Palani passed away
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்ப பெறப்படும் செயல்முறையின் போது இந்திய - சீன இராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது இருபடைக்குள்ளும் சண்டை வலுத்த நிலையில், இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் 2 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன இராணுவம் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. மேலும், நேற்று இரவே சீன இராணுவம் அத்துமீறியதாக தெரியவருகிறது.
இதனால் இந்திய - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பதற்றத்தை தணிக்க இந்திய - சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இறந்த மூன்று வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
லடாக் எல்லையில் சீன இராணுவத்தினர் தாக்குதலில் பலியான வீரர்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்துள்ளார். சீன இராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் பழனி வீரமரணம் அடைந்துள்ளார். பழனி கடந்த 22 வருடமாக ஹவில்தாராவில் பணியாற்றி வந்துள்ளார். இதனைப்போன்று சீன இராணுவ தரப்பிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீன தரப்பில் 3 வீரர்கள் முதல் 4 வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்டி அடிக்கும் சீனா... இராணுவ தலைமையுடன் ஆலோசனையை துவங்கும் இந்தியா..!!
Tamil online news Today News in Tamil
English Summary
India China border violent Ramanathapuram Palani passed away