#Breaking: IND Vs ENG 5 ஆவது டெஸ்ட் போட்டி இரத்து.. பகிரங்க மன்னிப்பு கேட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி இந்த போட்டியில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அணியின் பயிற்சியாளர் உட்பட 2 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியானது இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரில் இன்று நடைபெறுவதாக இருந்த போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் நகரில் இன்று பிற்பகல் நேரத்தில் நடைபெறவிருந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 ஆவது டெஸ்ட் போட்டித்தொடர் இரத்து செய்யப்படுகிறது என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டித்தொடர் இரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால், ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் முன்னிலையில் இருந்த இந்திய அணி கோப்பையை தட்டி செல்லலாம் என எதிர்பார்க்கபடுகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND Vs ENG 5 th Test Match Cancelled By ENG Cricket Comity due to COVID Fear


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->