நொடிப்பொழுதில் பயணிகள் பேருந்தில் மோதிய லாரி.! 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் நொடிக்கு பல்வேறு விபத்துகள் நடைபெற்று கொண்டு வருகிறது. அவ்வாறு எதிர்பாராமல் நடைபெறும் விபத்துகளில் சிக்கும் மக்கள் தங்களின் உயிர் மற்றும் உடமைகளை இழந்து இருக்கின்றனர். என்னதான் தொழில் நுட்பம் வளர்ச்சியை கண்டாலும் விபத்துகளை குறைப்பதற்கு கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த நிலையில்., ஜிம்பாவே நாட்டில் உள்ள ஹராரே - மாசுவிங்கோ தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்தானது பயணிகளுடன் பயணித்துக்கொண்டு இருந்தது. இந்த பேருந்தானது அங்குள்ள பெத்தர்ஸ்டோன் பகுதியில் சென்ற சமயத்தில் எதிரில் வந்த லாரியானது எதிர்பாராத விதமாக நொடிப்பொழுதில் மோதியது. 

மேலும்., லாரிக்கு முன்னாள் சென்று கொண்டு இருந்த வாகனம் திடீரென பிரேக் போடவே., முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்கு வாகனத்தை எதிர் திசையில் திரும்பியதால் இந்த எதிர்பாராத சோகமானது நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 16 பேர் சம்பவ இடத்தியிலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுமட்டுமல்லாது பலர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்., சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Zimbabwe road accident peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->