கரடுமுரடான சாலையில்., எதிரெதிரே மோதிய லாரி - பேருந்து..! துடிதுடிக்க அரங்கேறிய சோகம்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் நடைபெறும் பல்வேறு விபத்துகளில் சிக்கும் பொதுமக்கள் பரிதாபமாக தங்களின் உயிரை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில்., ஏமன் நாட்டில் சாலை விபத்துகளால் தொடர்ந்து பல உயிரிழப்புகள் அரங்கேறுகிறது. 

ஏமன் நாட்டில் இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் - ஏமன் நாட்டின் அரசிற்கும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர் வன்முறையானது நீடித்து வருகிறது. இதனால் பல போராட்டங்களும்., போரும் ஏற்பட்டு வருகிறது. 

இந்த சண்டை பல வருடங்களாக தொடர்ந்து வருவதன் காரணமாகவும்., தொடர் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறைவான முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலையின் காரணமாக சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. 

died, suicide attempt, murder,

இதனால் ஏற்படும் விபத்துகளால் தொடர் உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில்., ஏமன் நாட்டில் உள்ள அல் பேடா பகுதியில் பயணிகளை ஏற்றி சென்று கொண்டு இருந்த பேருந்து., லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் படுகாயமடைந்த மக்கள் உயிருக்கு அலறித்துடித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Yemen road accident peoples died 8


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->