உகாண்டா மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பரிதாப பலி.!! தத்தளிக்கும் மக்கள்..!!
in Uganda rain flood peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் அரங்கேறி., இதனால் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதுமட்டுமல்லாது மழை வெள்ளத்தின் காரணமாக அவ்வப்போது உயிரிழப்பும் நடந்து வருகிறது. ஆப்ரிக்க நாட்டில் உள்ள உகாண்டாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக மக்கள் பரிதாபமாக பலியாகிள்ளனர்.
ஆப்ரிக்க நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் இருக்கும் உகாண்டா நாட்டின் பருவமழை காலமானது தற்போது இருக்கிறது. இதனால் அங்குள்ள பல நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில்., திடீரென வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது.
இதனால் மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்., இது குறித்து பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும்., தற்போது வரை 11 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிரோன்க்கா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும்., மொத்தமாக 23 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Uganda rain flood peoples died