கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!! 17 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பல விதமான விபத்துகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. சாலை விபத்துகளை பொறுத்த வரையில்., உலகளவில் நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது. என்னதான் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த உலகில் இருந்தாலும்., சாலை விபத்துகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. 

ஆப்கானிஸ்தான்., சிரியா போன்ற நாடுகள் உள்நாட்டுப்போரின் காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதால்., இங்கிருக்கும் மக்கள் துருக்கிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த சமயத்தில்., துருக்கியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஈரான் நாட்டின் எல்லையில் உள்ள மாகாண பகுதியில்., சுமார் 40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. 

turkey bus accident, turkey, bus accident,

இந்த பேருந்தில் இருந்த பெரும்பாலானோரில் பாகிஸ்தான்., ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை சார்ந்த நபர்கள் என்று தகவல் தெரியவருகிறது. இந்த பேருந்தானது அங்குள்ள ஒஸ்ப் நகருக்கு அருகில் சென்ற சமயத்தில்., ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து., அங்குள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த துயர சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 17 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது சுமார் 20 பயணிகள் படுகாயமடைந்த நிலையில்., உயிருக்கு போராடி துடித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in turkey bus accident 17 peoples died and 20 peoples hardly injuries


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->