விமான சேவையை நிறுத்திய ஏர் ஏஷியா.. தவிக்கும் திருச்சி - மலேஷிய பயணிகள்.!
in Trichy to Malaysia Air Air flight cancelled due to corona virus and low passengers
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு 157,411 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப்போன்று சுமார் 5,845 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 75,953 பேர் சிகிச்சை முடிந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் அதிக மக்கள் பலியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இத்தாலியும் உள்ளது. உலகளவில் சுமார் 100 க்கும் அதிகமான நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.
இந்தியாவிலும் கரோனா வைரஸின் பாதிப்பு தற்போது தெரியவந்துள்ள நிலையில், சுமார் 104 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தனிவார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
உலகநாடுகளும் மக்களை காக்கும் பொருட்டு விமான சேவை, இரயில் சேவை மற்றும் பிற போக்குவரத்துகளை தடை செய்துள்ள நிலையில், திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் ஏர் ஏஷியா விமானங்கள் இரத்து செய்யப்பட்டு, நாளொன்றுக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும் என்று ஏர் ஏஷியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Trichy to Malaysia Air Air flight cancelled due to corona virus and low passengers