திடீரென இடிந்து விழுந்த பாலம்.! கீழே விழுந்த லாரி., துடிதுடித்து உயிரிழந்த மக்கள்..!!
in Taiwan bridge collapsed and accident 12 peoples died
இந்த உலகம் முழுவதிலும் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இவ்வாறான விபத்துகள் இன்றளவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. விபத்துகளால் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தவிப்புகளை தவிர்க்க முடிவதே இல்லை.
மனிதனால் வடிவமைக்கப்பட்ட பொருளினால்., மனிதனின் கட்டுப்பாடு இழந்த பின்னர் ஏற்படும் பெரும் விபத்தானது., அதிகளவிலான உயிர் சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த நிலையில்., தைவான் நாட்டில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில்., 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டில் உள்ள வடக்குப்பகுதியில் அமைந்துள்ள இலன் மாகாணத்தில் இருக்கும் மீன்பிடி துறைமுகத்தினை., நகரோடு இணைக்கும் விதத்தில் மேம்பாலம் ஒன்று இருக்கிறது.
இந்த மேம்பாலம் நேற்று திடீரென எதிர்பாராத விதமாக இடிந்து விளைவே., பாலத்தில் சென்று கொண்டு இருந்த லாரி மற்றும் பாலத்தின் கீழே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படகுகள் சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து., தகவலை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட மீட்பு பணியில்., சுமார் 6 பேர் பரிதாபமாக பலியானது தெரியவந்தது. மேலும்., 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Taiwan bridge collapsed and accident 12 peoples died