அடுத்தடுத்து மோதிக்கொண்ட எரிபொருள் டிரக் - பேருந்து.. அரங்கேறிய கோர விபத்து.. 30 பேர் உடல்நசுங்கி பலி.!!
in Syria bus and truck accident peoples died
சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரிலிந்து ஹோம்ஸ் நகருக்கு எரிபொருளை நிரப்பிய லாரியொன்று, தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்துள்ளது. இதே சாலையில் பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்தும் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளது.
இந்த இரண்டு வாகனமும் ஒரே சாலையில் சென்று கொண்டு இருந்த நிலையில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை லாரி இழந்துள்ளது. இதனையடுத்து தாறுமாறாக இயங்கிய லாரி பயணிகள் பேருந்து மற்றும் காரின் மீது அடுத்தடுத்து அதிவேகத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் எரிபொருள் டிரக் மற்றும் பேருந்து பலத்த சேதமடைந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உயிருக்காக அலறித்துடித்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துவக்கினர்.
இந்த கோர விபத்தில் சுமார் 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Syria bus and truck accident peoples died