செராமிக் தொழிற்சாலையில் தீவிபத்து... உடல்கருகி பலியான பணியாளர்கள்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் பல்வேறு வகையான விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தினமும் நொடிக்கு பலநூறுகணக்கான விபத்துகள் உலகெங்கிலும் நடப்பதாகவும்., இதனால் பலர் தங்களின் உயிரை பரிதாபமாக இழந்து வருவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சூடானின் தலைநகரான கார்டோன் நகரில் உள்ள பஹீர் பகுதியில் தொழிற்பேட்டையானது உள்ளது. இந்த தொழிற்பேட்டைகளில் கண்ணாடி பொருட்கள் செய்யும் செராமிக் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. 

இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும்., இன்று வழக்கம் போல பணியை செய்ய துவங்கிய நிலையில்., தொழிற்ச்சாலைக்குள் இருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரியொன்று திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

sudan ceramic factory,

இதனையடுத்து ஏற்பட்ட தீயானது மளமளவென எரிய துவங்கிய நிலையில்., இந்த கோரா விபத்தில் பணியாளர்கள் 24 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., 130 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்காக போராடினர்.

இந்த விபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர்., உயிருக்கு போராடிய பணியாளர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in sudan ceramic factory fire accident 24 workers died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->