இளம்பெண்ணை தாயாரின் முன்பே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரம்.! இறுதியில் பெண்ணிற்கு அரங்கேறிய சோகம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் பல அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் கடும் போராட்டம் நடத்தி வாழ்ந்து வருகின்றனர். 

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று சுமார் 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளது. இந்த கும்பலானது அங்கிருந்த ஒரு இல்லத்திற்குள் அதிரடியாக நுழைந்து வீட்டில் இருக்கும் பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளது. 

இந்த சப்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டினர் வீட்டின் கீழ்ப்பகுதிக்கு வரவே., வீட்டில் இருந்த பெண்ணை அவரது தாயாரின் முன்பே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் பெண் கதறித்துடித்தும் காதில் கேட்காதவாறு கொடூர முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்குள்ள மக்கள் உதவிக்கு கூட வராத நிலையில்., சம்பந்தப்பட்ட கும்பல் பெண்ணை சீரழித்து பின்னர் கடத்தி சென்றுள்ளது. மர்ம கும்பல் வெளியேறியதும் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in srilanka girl rapped and kidnapped by gang police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->