மலிவு விலையில் வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளும் பலே கும்பல்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in srilanka a prostitution introduce by online for foreign gang and foreign girls
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் நடந்து வருகிறது. இதனால் பல பெண்களின் எதிர்கால வாழ்க்கையானது கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது.
இன்றுள்ள தொழில்நுட்ப காலத்தில் வாழ்ந்து வரும் நாம்., இணையத்தின் மூலமாக நமக்கு தேவையான பல விஷயங்ளை பற்றி கற்றுக்கொண்டு வருகிறோம். அந்த வகையில்., நாம் பல விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளும் இணையத்தில்., நமக்கு தேவையற்ற பல விஷயங்ளையும் கொண்டுள்ளது.
இந்த உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலான இடங்களில் அரசின் அனுமதியதானோ அல்லது அனுமதியற்றோ விபச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விபச்சாரத்திற்கு பெண்களை வலுக்கயமாக கடத்தி வந்து ஈடுபடுத்தி அவர்களின் வாழ்க்கையை அளிக்கின்றனர்.
இந்த செயலை செய்வதற்கு உலகளவில் உள்ள கும்பலானது பெண்களை அந்தந்த நாடுகளில் இருந்து கடத்தி அல்லது பிற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக பாலியல் அடிமைகளாக உபயோகம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்., இலங்கையில் உள்ள பம்பலப்பிட்டி என்னும் நகரில் இருக்கும் விடுதியில் நேற்று காவல் துறையினர் திடீரென மேற்கொண்ட சோதனையை அடுத்து., அங்கு விபசாரத்திற்க்காக சீன மற்றும் கஜகஸ்தான் நாட்டை சார்ந்த பெண்கள் இருந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்., இவர்கள் இருவரும் துபாய் நாட்டில் இருக்கும் இணையத்தின் மூலமாக இயக்கப்பட்டு., அந்தந்த நாடுகளுக்கு பெரும் தொகைக்கு அனுப்பப்படுவதும்., ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வசூல்செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
குறித்த இணையத்தளத்தில் நபராக இணைந்து தனது விருப்பத்தை தெரிவிக்கும் பட்சத்தில்., அந்த நபரை சம்பந்தப்பட்ட விடுதிக்கு வரவழைத்த பின்னர் அவரின் விபரங்களை அறிந்து பெண்களை விபச்சாரத்திற்கு சுற்றுலா முறையில் அனுப்பியது தெரியவந்துள்ளது. இது குறித்த தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
in srilanka a prostitution introduce by online for foreign gang and foreign girls