இணையதள வாழ்க்கையில் மறக்க கூடாததை மறந்து தாய் செய்த காரியம்.. என்னவெல்லாம் காத்திருக்கிறதோ?..!!
in Spain mother missed child using mobile and went school
ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் பெண்மணியொருவர், தனது குழந்தையை தினமும் அவர்கள் பயின்று வரும் பள்ளிக்கூடத்திற்கு காரில் அழைத்து சென்று, பின்னர் மீண்டும் காரிலேயே அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பள்ளிக்கு செல்ல முயற்சித்துள்ளார்.
இவர் வழக்கம்போல தனது குழந்தைகளுடன் காரில் புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் இருந்து நீண்ட தூரம் சென்ற பின்னர் தனது குழந்தைகள் காரில் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் தனது குழந்தையை மறந்து காரில் வந்துள்ளது தெரியவந்தது. தனது தவறை உணர்ந்த தாயார் இது தொடர்பான விஷயத்தை காரில் இருந்தபடியே அலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
இதன்பின்னர் தவறை உணர்ந்து இந்த விடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், தனது நினைவின்றி அலைபேசியை இயக்கியபடியே செய்த காரியத்தால் சிரிப்பையும் அடக்க இயலாமல் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் தனது குழந்தைகளை திருப்பி அழைத்து வரவேண்டும் என்றும் இறுதியாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சுமார் 46 வினாடிகள் மட்டும் பதிவாகும் நிலையில், சுமார் 40 இலட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Spain mother missed child using mobile and went school