செங்குத்தான பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து.. 25 பேர் உடல்நசுங்கி பலியான சோகம்.!! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்க நாட்டில் உள்ள கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கேப் பட்டர்ஒர்த் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து ஹிப்பி நகருக்கு பேருந்து சென்று கொண்டு இருந்தது. 

இந்த பேருந்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், குலவாணி மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்து சென்று கொண்டு இருக்கும் போதே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்துள்ளது. 

இந்த பேருந்து எதிர்பாராத விதமாக செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் சுமார் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்காக அலறித்துடித்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in south Africa bus accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->