விடுதியை சிறைபிடித்து அரங்கேறிய கொடூர தாக்குதல்.. பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு.. பலியான உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


சோமாலிய நாட்டின் தலைநகர் மொகடிஷாவில் புகழ் பெற்ற விடுதியாக எஸ்.ஒய்.எல் விடுதி இருந்து வருகிறது. இந்த உணவகம் மற்றும் விடுதிக்கு அரசியல் தலைவர்கள்., இராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு தூதரகத்தை சார்ந்த அதிகாரிகள்., பிரபலங்கள் என அனைவரும் வருவதுண்டு.. 

நேற்று வழக்கம் போல எண்ணற்ற வாடிக்கையாளருடன் பரபரப்பாக விடுதி இருந்த நிலையில்., காவல் அதிகாரிகளின் சீருடையில் நுழைந்த 5 பயங்கரவாதிகள் விடுதியை சிறைபிடித்து., கையெறிகுண்டுகளை வீசி வெடிக்க செய்து மிரட்ட துவங்கினர். 

சற்றும் இந்த தாக்குதலை எதிர்பார்க்காத மக்களின் மனதில் பயம் எழுந்துகொள்ளவே., இது குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும் - பாதுகாப்பு படையினருக்கும் பலமணிநேரம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. 

somalia hotel attack,

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் 5 பயங்கரவாதிகளும் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில்., 3 பொதுமக்கள் மற்றும் 2 பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளால் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., 80 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

இந்த கொடூர தாக்குதலுக்கு அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில்., அல்-கொய்தாவுடன் கூட்டணியில் உள்ள அமைப்பு என்பதும்., கடந்த 2011 ஆம் வருடத்தில் அல்-கொய்தா இயக்கத்துடன் இணைந்ததால் சோமாலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும்., அங்குள்ள கிராமப்புறங்கள் சிலவற்றை இந்த அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in somalia hotel terrorist attack peoples and officers died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->