அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து..! 5 பேர் பரிதாப பலி., 40 பேர் படுகாயம்..!! கண்ணீரில் மிதக்கும் மக்கள்.!!
in slovakia building fire accident peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் அரங்கேறுவதாகவும்., இவ்வாறான விபத்துகள் அரங்கேறி மக்கள் பரிதாபமாக பலியாகி வருவதும் தொடர்ந்து வருகிறது.
ஐரோப்பியா கண்டத்தில் உள்ள நாடு ஸ்லோவாக்கியா. இந்த நாட்டினை குட்டி அழகிய நாடு என்றும் அழைக்கலாம். இந்நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள ப்ரேஸோவ் நகர் பகுதியில் 12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் நேற்று திடீரென வெடித்து சிதறிய சப்தமானது கேட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கட்டிடத்தின் மேல் பகுதியில் 5 ஆம் தளத்தில் தீப்பிடித்து எரிய துவங்கியது. இந்த விபத்து குறித்த தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 5 பேரின் உடலை சடலமாக மீட்ட நிலையில்., 40 பேர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., மருத்துவமனையில் இருப்பவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in slovakia building fire accident peoples died