மருத்துவர்களின் பணிக்கு சென்ற பேருந்து விபத்திற்குள்ளாகி 14 மருத்துவர்கள் பரிதாப பலி..!!
in poliviya doctor travelling bus accident all died
இந்த உலகம் முழுவதும் பல விதமான விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பல விதமான சாலைகள் உள்ள நிலையில்., நொடிக்கு பல்வேறு விபத்துகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அவ்வாறு நடைபெறும் விபத்துகளில் சிக்கும் மக்கள் பரிதாபமாக தங்களின் உயிர் மற்றும் உடமைகளை இழந்தும், தங்களின் அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களை இழந்தும் வாடி வருகின்றனர்.
பொலிவியா நாட்டில் இருக்கும் அப்பலோ மருத்துவமனைக்கு பேருந்தில் மருத்துவர்கள் சென்று கொண்டு இருந்தனர். இவர்கள் சென்ற பேருந்தானது அங்குள்ள லா பாஸ் என்ற பகுதிக்கு இடையே சென்று கொண்டு இருந்த சமயத்தில்., திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்குள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவே., பேருந்தில் பயணம் செய்த 3 பெண் மருத்துவர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in poliviya doctor travelling bus accident all died