சென்ட் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து... துடிதுடித்து உயிரிழந்த மக்கள்.!!
in Paskistan Perfume factory fire accident peoples died
பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் மாகாணத்தில் உள்ள ஷாதரா பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தொழிற்சாலையில் பணியாளர்கள் அனைவரும் வழக்கம்போல தங்களின் பணிகளை செய்து கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில், வாசனை திரவியம் தயாரிக்க வைக்கப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரசாயன திரவியம் வைக்கப்பட்டு இருந்த பகுதியில் தீ மளமளவென பற்றியெரிய துவங்கியுள்ளது. இதனை அறிந்த பணியாளர்கள் உயிருக்காக அலறித்துடித்து ஓடினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் சிக்கியிருந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Paskistan Perfume factory fire accident peoples died