ஒரே ஏரியில் குவிந்த 15 ஆயிரம் மக்கள்.! வெளியான அதிர்ச்சியூட்டும் ஆச்சரிய காரணம்.!! - Seithipunal
Seithipunal


அன்றைய காலகட்டத்தில் குளிப்பதற்கு கிணறுகள் மற்றும் ஆறுகள்., குளங்களில் அதிகளவு மக்கள் சென்று குளித்து வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் அதிகளவு மக்கள் தங்களின் குடும்பத்துடன் சென்று வருவதும் வழக்கம். அதனைப்போன்று சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்., பாரிஸ் நாட்டில் உள்ள சிறிய குளத்தில் குளிக்க சென்ற கொண்டாட்டமானது ஆச்சர்யத்தையும்., அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

பாரிஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் கிர்ஜி போண்டோய்ஸ் என்ற சிறிய ஏரியானது உள்ளது. இந்த ஏரியில் சனிக்கிழமையன்று அங்கு நிலவிய வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில்., சிறிய ஏரியில் மொத்தமாக கூடினர். இங்கு வந்த பெரும்பாலான மக்கள் ஏரியில் குளித்தும்., நீச்சல் அடித்தும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருந்தனர். 

ஒரே நேரத்தில் மக்கள் மொத்தமாக கூடியதை அடுத்து இது குறித்து அவர்களிடம் கேட்ட சமயத்தில்., இன்றைய நாளில் உள்ளூர் வெப்ப நிலையானது 36 டிகிரி செல்ஸியஸ் பதிவானது., வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால் ஏரியே நிரம்பி வழிந்தது. 

இந்த ஏரியானது குளிர்ச்சியாக இருந்ததால் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் இருந்தனர் என்று தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாது தேவையான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டதற்கு நன்றி என்றும் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in paris lake 15 thousand peoples enjoy week end day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->