தீப்பற்றி எரிந்த அதிவிரைவு இரயில்.. பரிதாபமாக பலியான 25 பேர்... தொடரும் சோகம்.!!
in Pakistan train fire accident peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் உலகளவில் பல்வேறு விபத்துகள் அரங்கேறி., மக்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் இரயில் தீப்பற்றி எறிந்ததில்., 25 பேர் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி - இராவல்பிண்டி இடையேயான தேஸ்காம் அதிவிரைவு வண்டியானது தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., இன்று காலை நேரத்தில்., தேஸ்காம் அதிவிரைவு வண்டி அங்குள்ள லியாகத்பூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
இந்த தருணத்தில்., இரயிலில் திடீரென தீப்பிடித்து எறியதுவங்கியது. தீயானது இரயில் சென்ற வேகத்தில் அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவவே., உடனடியாக இரயிலும் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த மக்கள் உயிருக்காக அலறித்துடித்தனர்.
இந்த விஷயத்தை அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துவக்கிய நிலையில்., தீ விபத்தில் உயிரிழந்த 25 பேரின் உடலை மீட்டனர். மேலும்., படுகாயமடைந்த 13 பேரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும்., தீயணைப்பு வாகனங்கள் மூலமாக பலமணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Pakistan train fire accident peoples died